சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மீளாய்வு மனு மீதான தீர்ப்பு நாளை (16) அறிவிக்கப்படவுள்ளது. நாளைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு இம்மனு மீதான தீர்ப்பினை அறிவிப்பதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இரு மனுக்கள்:
ஷானி அபேசேகர சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுவும் அதே விவகாரத்தில் விளக்கமறியலில் உள்ள சி.ஐ.டி. முன்னாள் பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுவும் இன்று மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது, மனுதாரர்
ஷானி அபேசேகர சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா ஆஜரானார். பொலிஸ் பரிசோதகர் சுதத் மெண்டிஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆஜரானார்.
சட்ட ம அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ரொஹந்த அபேசூரிய ஆஜரானார்.
ஷானிக்கு பிணையளிக்க முடியும்:
ஷானி அபேசேகரவுக்கு பிணை கோரி வாதங்களை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயா பிணை சட்டத்துக்கு அமைய பிணை வழங்க அதிகாரம் இருந்தும், கம்பஹா மேல் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
நாட்டை விட்டு ஓடப்போவதில்லை:
‘ பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவைப் போன்று நாட்டை விட்டு சென்று விடலாம் என கூறி பிணைக்கு எதிர்ப்பு முன் வைக்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நிசாந்த சில்வா போன்றோர் நாட்டை விட்டு செல்லும் போதும் நாம் போகவில்லை. எதற்கும் முகம் கொடுக்க தயாராக நாம் இங்கேயே இருந்தோம். விசாரணையாளர்களின் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினோம்.
எமது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நாம் பதவியில் கூட இல்லை. அதனால் இந்த விசாரணைகளில் கூட எமக்கு தலையீடு செய்ய முடியாது. எனவே பிணையளிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.’ என சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதிட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகள் சமர்ப்பிக்காத வைத்திய அறிக்கை: