அசாத் சாலி ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம்

நேற்று (16) மாலை சி.ஐ.டியினரால் கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை சி.ஜ.டியினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த, சில தினங்களாக அசாத் சாலி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்திலையிலேயே நேற்று மாலை 6 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here