மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது- ஜனக ரத்நாயக்க

மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக இன்று (8) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
தற்போதைய மின்சார கட்டணங்கள் கூட ஒப்பீட்டளவில் அதிகமானவையாகும். எனவே எதிர்காலத்தில் மின்சார செலவைக் குறைக்கும் நோக்கில் மின்சார உற்பத்தியில் பல புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலை சேர்க்க வேண்டியுள்ளது.
இதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய தேவையான உதவிகள் வழங்கப்படும். இதனூடாக மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous articleசொத்து விபரங்களை அறிவித்த எம்.பி.க்களின் பெயர்களை வெளிப்படுத்தவும்
Next articleமின்னியளாலர்களுக்கு நிரந்தர தொழிற் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here