கட்டாய தகனத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு ஜக்கிய நாடுகள் வலியுறுத்தல்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கின்ற  நபர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்வதினை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நேற்று (25) வெளியிடப்பட்ட நான்கு விஷேட நிபுணர்களின் கருத்துக்கள் உள்ளடங்கிய அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுகிறது. இதனூடாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையும் என்பதுவே இலங்கை அரசாங்கத்தின் மேற்படி செயற்பாடுகளுக்கு காரணம் என்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மேற்படி காரணம் விஞ்ஞான ரீதியாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாகவும் இவ்வாறு சடலங்களை எரிப்பதானது மனித உரிமை மீறல் செயற்பாடு என்பதாகவும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டியுள்ளது.
முழுமையான அறிக்கையினை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்
https://www.ohchr.org/EN/NewsEvents/Pages/DisplayNews.aspx?NewsID=26686&LangID=E

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here