‘சாதாரண தரப் பரீட்சைகள் 2021 ஜனவரி 18ஆம் திகதி ஆரம்பமாகும்’- கல்வி அமைச்சு

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

வழமையாக டிசம்பர் மாதம் நடைபெறும் சாதாரண தரப் பரீட்சைகள் இம்முறை கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிற்போடப்பட்டுள்ளன.

பரீட்சைகளுக்குரிய நேரசூசி மற்றும் மேலதிக தகவல்கள் பரீட்சைகள் தொடர்பான www.doenets.lk இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்தது.

பாடசாலைகளில் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதோடு, புதிய கல்வியாண்டுக்காக 2021 ஜனவரி மாதம் 4ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

Previous articleநிரந்தர நியமனம் வழங்கப்படாத உதவி ஆசிரியர்கள் நுவரெலியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்
Next articleநோயுற்ற நிலையில், போதிய மருத்துவப் பராமரிப்புகளுமின்றி 5 மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ரம்ஸி ராசிக்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here